மீண்டும் தமிழகத்தில் ஊரடங்கா ? – தமிழக தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை
தமிழகத்தில் தினமும் கொரோனா தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பு குறித்து தமிழக தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா தொற்று:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று ஒரு சில மாதங்களில் உலகம் முழுவதும் பரவி விட்டது. இதனால் உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அனைத்தும் முழு ஊரடங்கு முறையை கடைப்பிடித்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் மத்திய அரசின் உத்தரவு படி, ஊரடங்கு முறையை அமல்படுத்தியது. இதனால் மார்ச் 24 ம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடந்த ஆண்டு முதல் பின்பற்றப்பட்டது.
நிலவரம்:
ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னரே தமிழகத்தில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. முழு ஊரடங்கினால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டது. இதனால் சாதாரண மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. 2020 ம் ஆண்டு இறுதியில் கொரோனா பாதிப்புகள் சற்று குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, பள்ளிகள், தொழில்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
கொரோனா இரண்டாம் அலை:
தற்போது அனைத்து பகுதிகளிலும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பது குறித்து தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்கள் இன்று காலை 11 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளியில் ஆலோசனை நடத்துகிறார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்