மாநிலம் முழுவதும் 17 கிராமங்களில் முழு ஊரடங்கு அமல் – நிர்வாகம் அறிவிப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைக்கும் ஒரு முயற்சியாக அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள 17 கிராமங்கள் தன்னார்வமாக முழு முடக்கத்தை அமல்படுத்த முடிÐவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு
கொரோனா 2 ஆம் அலையை கட்டுப்படுத்த நாடு முழுவதுமுள்ள பல்வேறு மாநில அரசுகள் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. எனினும் மாநிலங்கள் தோறும் இக்கட்டுப்பாடுகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதற்கிடையில் தான் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த அகமது நகர் மாவட்டத்தின், 17 கிராமங்கள் தன்னார்வமாக முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதிப்பதாக அறிவித்துள்ளது.
தனியார் பள்ளிகளில் RTE இலவச மாணவர் சேர்க்கை – நாளை கடைசி நாள்!
அதாவது மகாராஷ்டிரா மாநிலத்தில் தினசரி கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து விட்டாலும், அகமது நகரின் பர்னர் தாலுகா பகுதிகளில் மட்டும் கொரோனா நோய் தொற்று விகிதம் சற்று அதிகமாக உள்ளது. இதன் காரணமாக சகூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 16 கிராமங்கள் முழு ஊரடங்கை விதிக்க முடிவு செய்துள்ளன.
TN Job “FB Group” Join Now
கடந்த 2 வாரங்களாக இந்த 17 கிராமங்களில், தினசரி 30 முதல் 35 வரை கொரோனா வழக்குகள் கண்டறியப்பட்டன. ஆனால் கடந்த ஜூலை 29 ஆம் தேதி அன்று, இந்த எண்ணிக்கையானது 63 ஆக உயர்ந்துள்ளது. அதனால் குறிப்பிட்ட 17 கிராமங்களில் மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை செயல்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (ஆகஸ்ட் 1) ஒரு நாளில் 6,479 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 157 இறப்புகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.