தமிழகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதனால் தேர்தலுக்கு பின் மீண்டும் ஊரடங்கு மட்டும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊரடங்கு:
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் மூன்றாம் அலை கொரோனா பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்று உறுதி செய்யபடுவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மருத்துவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தார். அதன்படி கடந்த மாதங்களில் மாநிலம் முழுவதும் இரவு 10 மணி வரை காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு போன்றவை அமலில் இருந்தது.
வைரலாகும் “பாரதி கண்ணம்மா” ரோஷினியின் நடன வீடியோ – குவியும் லைக்குகள்!
அரசின் முயற்சிகளால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த காரணத்தினால் ஜனவரி கடைசி வாரத்தில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது. வரப்போகும் நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு தான் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டதாக அரசியல் கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை கூறி வந்தனர். கொரோனா பரவல் முழுமையாக குறையாத நிலையில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டால் பாதிப்புகள் மேன்மேலும் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க நாட்டில், நியோகோவ் மற்றும் ஓமிக்ரான் வைரஸில் இருந்து உருமாறிய பிஏ 2 வைரஸ் என்ற புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
Post Office சூப்பர் சேமிப்பு திட்டம் – ரூ.100 இருந்தால் எளிதாக கணக்கு தொடங்கலாம்!
இந்த வைரஸ் அபாயகரமானது என உலக சுகாதார அமைப்பு உலக நாடுகளுக்கு எச்சரித்துள்ளது. இந்த நேரத்தில் தமிழகத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான தேர்தல் பரப்புரைகள் தீவிரமடைந்து வருகிறது. மக்கள், அரசியல் கட்சியினர் கூட்டம் கூட்டமாக ஒன்று கூடுகின்றனர். யாரும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவதில்லை. இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனால் தேர்தலுக்கு பின் மீண்டும் ஊரடங்கு மட்டும் கடும் கட்டுப்பாடுகளை அரசு விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.