ஆகஸ்ட் 8ம் தேதி முழு ஊரடங்கு, இன்று முதல் புதிய தளர்வுகள் அமல் – மாநில அரசு உத்தரவு!
கேரளாவில் கொரோனா புதிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை இன்று (ஆகஸ்ட் 5) முதல் தளர்த்துவதாகவும், கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்குவதற்கான புதிய உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்
கொரோனா 2 ஆம் அலை பாதிப்பானது நாடு முழுவதும் குறைந்து கொண்டிருக்கக்கூடிய சூழலில், கேரள மாநிலத்தில் மட்டும் புதிய பாதிப்புகளானது கடந்த சில நாட்களாக தீவிரமடைந்து வந்தது. அதாவது கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்புகள் 2 ஆயிரத்துக்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டு வருகையில், கேரளாவில் மட்டும் 20 ஆயிரம் புதிய பாதிப்புகள் ஏற்பட்டது. அதனால் கேரள மாநிலத்தில் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் மீண்டுமாக அமல்படுத்தப்பட்டது.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் – தலைவர்கள் அஞ்சலி!
இதை தொடர்ந்து தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு இன்று (ஆகஸ்ட் 5) முதல் தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான புதிய உத்தரவில், திங்கள் முதல் சனி வரை வாரத்தின் ஆறு நாட்களும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நிறுவனங்கள் அனைத்தும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் கடைகள், சந்தைகள், வங்கிகள், அலுவலகங்கள், நிதி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தொழில்துறை நிறுவனங்கள், திறந்த சுற்றுலா இடங்களும் அடங்கும்.
இதற்கிடையில், திங்கள் முதல் வெள்ளி வரை அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், கமிஷன்கள் உள்ளிட்ட பொதுத் துறைகளில் உள்ள அனைத்து நிறுவனங்களும் செயல்படும். இந்த நிறுவனங்களுக்கு வரும் நபர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு குறைந்தபட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களாகவும், 72 மணி நேரத்திற்கு முன் RT-PCR பரிசோதனையில் எதிர்மறை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இது தவிர மருத்துவ அவசரநிலை, மருந்து வாங்குவது, மரணம், திருமணம் போன்ற காரியங்களுக்கான பேருந்து, ரயில், விமான போக்குவரத்துகள் அனுமதிக்கப்படுகின்றன. வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் நபர்களின் எண்ணிக்கையை 40 ஆகவும், 20 பேர் திருமணங்கள் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மறுபுறத்தில் பள்ளிகள், கல்லூரிகள், டியூஷன் மையங்கள், சினிமா தியேட்டர்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றை மீண்டும் திறக்க அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனிடையே கேரளாவில் நேற்று (ஆகஸ்ட் 4) ஒரு நாளில் 22,414 புதிய கொரோனா பாதிப்புகள் மற்றும் 108 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.