தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் ஜூலை 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக கடைகள் செயல்படும் நேரம் இரவு 8 மணியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தளர்வுகள் :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மே மாதம் முதல் பரவுகிறது தொற்று காரணமாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவைகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அரசு அறிவுறுத்தியது. வெளி மாவட்டங்களுக்கு அவசர தேவைகளுக்கு மட்டும் இ – பதிவு பெற்று செல்ல அனுமதிக்கப்பட்டது.
ஜூலை மாதத்தில் 15 நாட்கள் வங்கி விடுமுறை – RBI பட்டியல் வெளியீடு!
அதன் பிறகு அரசின் நடவடிக்கையால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்தது. இதனால் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஜூன் 14 முதல் கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் வருகிறது. அதன் படி வகை 1 ல் 4 மாவட்டங்களும் வகை 2 ல் 23 மாவட்டங்களும் வகை 3 ம் 11 மாவட்டங்களுக்கு இடம் பெற்றுள்ளனர். நேற்று தமிழக முதல்வர் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்தார்.
TN Job “FB Group” Join Now
அதன்படி ஜூலை 5ஆம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கடைகள் இனி 8 மணி வரை இயங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து உணவகங்கள். தேர்நீர் கடைகளும் இன்று முதல் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை 50% இயங்கலாம் எனவும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஜூலை 12 வரை தொடரும் எனவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.