ஜூன் 30 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுவதாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
ஆந்திர மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி, புதிதாக 6,151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 18.3 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும், தற்போது 69,831 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 7,728 பேர் சிகிச்சையில் குணமடைந்து உள்ளனர். மாநிலத்தின் 4 மாவட்டங்களை தவிர மற்ற ஒன்பது மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 500க்கும் குறைவாகவே உள்ளது.
தமிழகத்தில் பதிவு செய்யாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நிவாரண நிதி – அரசு அறிவிப்பு!
மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி மாநிலத்தின் கொரோனா பாதிப்பு குறித்து மறுஆய்வு ஒன்றை மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் கொரோனா ஊரடங்கை மாநிலம் முழுவதும் நீட்டிப்பதாக முடிவு செய்துள்ளார். மாநிலத்தில் ஜூன் 20ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் முன்னதாக அமலில் இருந்தது. கிழக்கு கோதாவரி, சித்தூர் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்கள் மற்றும் மாநிலத்தின் தென் பகுதியில் அதிக எண்ணிக்கையில் தொற்று பாதிப்புகள் இருந்தது.
TN Job “FB Group” Join Now
இதனால் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில தளர்வுகளையும் அரசு அறிவித்துள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தைத் தவிர, மற்ற இடங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தளர்வு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரியில் மாலை 6 முதல் 2 மணி வரை மட்டுமே தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. புதிய தளர்வுகள் ஜூன் 20ம் தேதி முதல் மாநிலத்தில் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடைகள் அனைத்தும் மாலை 5 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.