ஜூலை 12 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கோவா மாநில அரசு ஜூலை 12ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவினை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதில் கடைகள் திறக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா வைரஸ் பாதிப்பு நிலைமையை ஆய்வு செய்த பின்னர், கோவா அரசு ஊரடங்கை ஜூலை 12 வரை நீட்டித்து உள்ளது. புதிய உத்தரவை பிறப்பித்த முதல்வர் பிரமோத் சாவந்த் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து உள்ளார். உள்ளூர் கடைகள் இப்போது காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், சலூன்கள் மற்றும் வெளிப்புற விளையாட்டு வளாகம், அரங்கங்களை திறக்க மாநில அரசு அனுமதித்துள்ளது.
தமிழகத்தில் இ-பதிவு, இ-பாஸ் நடைமுறை ரத்து – ஜூன் 12 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
முன்னர் ஜூன் 26 அன்று, அண்டை மாநிலங்களில் கண்டறியப்பட்ட புதிய டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு காரணமாக கோவா அரசு ஜூலை 5 வரை ஊரடங்கை நீட்டித்து இருந்தது. மாநிலத்தில் பல தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்ட பின்னர் மே முதல் கோவாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மாநிலத்தின் பொருளாதார நிலைமையை மேம்படுத்த மாநில அரசு சமீபத்தில் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. இது தொடர்பாக ஒரு உத்தரவை பிறப்பித்த முதலமைச்சர், கோவாவில் அனைத்து கடைகளும் கடைகளும் காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக கூறியிருந்தார்.
TN Job “FB Group” Join Now
மேலும், கோவாவில் திருமண விழாக்களுக்கு மாநில அரசு அனுமதி அளித்திருந்தாலும் 50 பேருக்கு மட்டுமே கலந்து கொள்ளலாம். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாநில முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பில் பணியாற்றிய மாநிலத்தில் உள்ள ஒப்பந்த சுகாதார ஊழியர்களுக்கு அரசு சேவைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று கோவா அரசு உறுதி அளித்துள்ளது.