ஜூன் 16 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!!
கேரள மாநிலத்தில் ஜூன் 16ம் தேதி வரையிலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சில தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கேரள மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி, 14,424 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,58,565 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 10,631 ஆகவும் பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் மொத்தம் 17,994 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1,35,298 பேர் மாநிலத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 1,07,250 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
ஜூன் 21 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு!
தற்போது ஜூன் 16ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனுடன் ஜூன் 11 மற்றும் 12ம் தேதிகளில் இன்னும் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் கேரளா மாநில அரசு ஜூன் 10ம் தேதி அறிவித்தது. முதன்முதலில் மே 8ம் தேதி அன்று மாநிலத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, அது பல முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் அறிவிப்பு:
- உணவகங்களில் பார்சல் சேவைக்கும் தடை விதிக்கப்பட்டு, வீட்டு விநியோகத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- கடுமையான கொரோனா தடுப்பு விதிமுறைகளுடன் ஜூன் 12, 13ம் தேதிகளில் கட்டுமான நடவடிக்கைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
- மொபைல் போன் பழுதுபார்க்கும் கடைகள் மற்றும் பிற மின்னணு பழுதுபார்க்கும் கடைகளும் ஜூன் 11 வெள்ளிக்கிழமை திறக்க அனுமதிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
- எழுதுபொருள், நகைகள், காலணி, ஜவுளி கடைகள் மற்றும் ஒளியியல் வல்லுநர்கள் வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறார்கள்.
- தற்போதைய வழிகாட்டுதல்களின்படி, அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள், தொழில்களுக்கான மூலப்பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் எல்லா நாட்களிலும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
- மாநிலத்தில் உள்ள வங்கிகள் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய மாற்று நாட்களில் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.
- ஜூன் 17 க்குப் பிறகு, அனைத்து அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், 50% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.