தமிழகத்தில் ஜூன் 14க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு – மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரை!!
தமிழகத்தில் தற்போதைய சூழலில் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலினுக்கு மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். இது குறித்த முடிவு இன்று அல்லது நாளைக்குள் அறிவிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிக அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கையாக முதலில் மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமலுக்கு வந்தது. இந்த தளர்வுகளை மக்கள் முறையாக பயன்படுத்தாத காரணத்தால் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்தது. இதனால் மே 24ம் தேதி முதல் அதிக கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவை அரசு அறிவித்தது.
5 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக தேர்ச்சி – மாநில அரசு அறிவிப்பு!
தளர்வுகளற்ற ஊரடங்கின் விளைவால் இரண்டு வாரத்திற்குள் பாதிப்புகள் படிப்படியாக குறையத் தொடங்கியது. அதன் பின்னர் ஜூன் 7 முதல் 14ம் தேதி வரை தமிழக அரசு ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்தது. ஆனாலும், பாதிப்புகள் தொடர்ந்து அதிகமாக உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் அதிகளவு தளர்வுகள் அளிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 14க்கு பின்னர் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் தலைமையில், அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
TN Job “FB Group” Join Now
மருத்துவ வல்லுநர்கள் தமிழகத்தில் தொடர்ந்து ஊரடங்கை நீட்டிக்குமாறு முதல்வருக்கு பரிந்துரைத்துள்ளனர். இந்த பரிந்துரையின் அடிப்படையிலேயே முதல்வர் ஊரடங்கு குறித்த முடிவுகளை எடுப்பார் என்று தெரிவிக்கின்றனர். கொரோனா பாதிப்பு இன்னும் குறையாத 11 மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட வாய்ப்புகள் இல்லை. ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை முதல்வர் இன்று அல்லது நாளை வெளியிடுவார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.