ஜூன் 14ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு? விரைவில் முதல்வர் அறிவிப்பு!
கர்நாடகா மாநிலத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு ஜூன் 14ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அதன் பின்னர் ஊரடங்கை நீடிப்பது குறித்த அறிவிப்பை முதல்வர் விரைவில் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில், 11,958 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 340 பேர் மாநிலத்தில் தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள். இதனால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்திற்கு அதிகமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31,920 ஆகவும் உயர்ந்துள்ளது. முன்னதாக நோய் தடுப்பு நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் ஏப்ரல் 27ம் தேதி முதல் 14 நாட்கள் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முன்னுரிமை – நீதிமன்றம் உத்தரவு!!
தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்ததால், மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையின் படி முறையே முதலில் ஜூன் 7ம் தேதி வரையிலும், பின்னர் ஜூன் 14ம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜூன் 14ம் தேதிக்கு பின்னர் மாநிலத்தில் ஊரடங்கை நீக்குவதாக செய்திகள் வெளிவருகின்றது.
TN Job “FB Group” Join Now
இதனை அடுத்து, வரும் புதன்கிழமை கோவிட்-19 தொடர்பாக அமைச்சர்களுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம் நடத்தி நிலைமையை ஆராய்ந்து பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவது குறித்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர், பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மாவட்டங்களில் மட்டும் முதல் கட்டமாக தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக ஓரிரு நாட்களில் முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறியுள்ளார்.