ஜூன் 28 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – மலேசியா அரசு அறிவிப்பு!!
மலேசியாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 15 முதல் ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மலேசியாவில் கொரோனா மூன்றாம் அலை MCO 3.0 என்று அழைக்கப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5000யை கடந்துள்ளது. இதனால் மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு சலுகை இல்லை – அரசு அறிவிப்பு!
மே மாதத்தில், COVID-19 வழக்குகளின் மூன்றாவது அலைக்கு மத்தியில் மலேசியாவில் நாடு தழுவிய ஊரடங்கு மீண்டும் விதிக்கப்பட்டது. அனைத்து பொருளாதாரத் துறைகளும் இந்த காலகட்டத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் மாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணம் மற்றும் சமூக, விளையாட்டு மற்றும் கல்வி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன.
TN Job “FB Group” Join Now
தற்போது, அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் கொரோனா பரவல் காரணமாக நீடிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி அனைத்து கட்டுப்பாடுகளும் ஜூன் 15 முதல் ஜூன் 28 வரை அமலில் இருக்கும். ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாகவே கொரோனா பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஏழை மக்களின் வாழ்க்கை நிலை என்பதைப் பார்க்க எவரும் இல்லை ஏழைகள் பகடக்காய் போல் விளையாட்டும் அரசியல்