பேருந்துகள் இயங்க அனுமதி, ஜூன் 20 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் குறைவு காரணமாக பல தளர்வுகள் வழங்கப்பட்டு, ஜூன் 20 வரை அனைத்து கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் அதிகம் பயணம் செய்யும் வழித்தடங்களில் இன்று முதல் அதிகப்படியான பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பேருந்துகள் இயக்கம்:
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூன் 11 ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டன. அதன் படி அத்தியாவசிய தேவைகளுக்கு காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூன் 20 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கும் மாநிலங்கள் பட்டியல் – மத்திய அரசு வெளியீடு!
அதன்படி நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மிகவும் தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. வங்கி பணியாளர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பணியில் இருப்பார்கள்.
ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்வுகளில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ராஜமகேந்திரவரம், விஜயவாடா, ஸ்ரீகாகுளம், எலுரு, விஜயநகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் அதிக அளவில் பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர், இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள் காரணமாக பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. இதனால் இன்று (ஜூன் 11) முதல் கூடுதல் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக போக்குவரத்து கழக மண்டல மேலாளர் தனம் கூறுகையில்,மே மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வுகளின்படி, 35 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. தற்போது அதிக தளர்வுகள் காரணமாக கூடுதல் வழித்தடங்களில் அதிகப்படியான பேருந்துகள் இயக்கப்படும்.குறிப்பாக 10 சதவீத அளவிற்கு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.