ஜூன் 28 வரை பல்கலைக்கழக வளாக ஊரடங்கு நீட்டிப்பு – JNU அறிவிப்பு!
கொரோனா பேரலை எதிரொலியாக கடந்த ஒரு மாத காலமாக மூடப்பட்டிருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) வளாகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள், ஜூன் 28 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்டுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
JNU ஊரடங்கு நீட்டிப்பு
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை காரணமாக அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஜூன் 28 வரை கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளான முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து JNU சார்பில், ஜூன் 20 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், அத்தியாவசிய நடவடிக்கைகள் மற்றும் சேவைகளைத் தவிர்த்து, மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பிற்கான அவசர நடவடிக்கைகளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு – புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!!
இந்த பொது முடக்க காலத்தில் Group-A மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் மட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் இன்று (ஜூன் 21) முதல் வழக்கமான பணிகளில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பல்கலைக்கழகத்தில் இயங்கும் பள்ளிகள், மையங்கள், துறைகளின் பணிக்காக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேவைக்கேற்றபடி, அதாவது 50% வரை கலந்துகொள்வார்கள். மீதமுள்ள 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர பல்கலைக்கழக வளாகத்தில் மற்ற அத்தியாவசிய, அவசர சேவைகளுக்காக மட்டும் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர வளாகத்தில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், தப்தி, பூர்வஞ்சல் வளாகம் போன்ற அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கடைகளும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகின்றன. தனித்து இயங்கும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசிய கடைகள் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
மேலும் வளாகத்துக்குள் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கேன்டீன்களும் 50% இருக்கை திறனுடன் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. அடையாள அட்டை அனுமதியுடன் ஈ-காமர்ஸ் செயல்பாடுகள் செயல்படலாம். பல்கலைக்கழக வளாகத்திற்குள் 2 பயணிகள் கொண்ட இ-ரிக்ஷா வசதி அனுமதிக்கப்படுகிறது. ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், கொரோனவால் பாதிக்கப்பட்டாலோ அல்லது வீட்டு தனிமைப்படுத்தலில் இருந்தால் உடனடியாக நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.