ஜூன் 18 வரை ஆறு உள்ளாட்சி அமைப்புகளில் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
திரிபுரா மாநிலத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள ஆறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மட்டும் ஜூன் 18ம் தேதி வரை ஊரடங்கை நீடிப்பதாக சட்ட அமைச்சர் ரத்தன் லால் நாத் அறிவித்துள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
திரிபுரா மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவு முதன் முதலில் மே 16 அன்று அகர்தலா நகராட்சியில் விதிக்கப்பட்டது. தற்போது அனைத்து இடங்களிலும் இன்றுகாலை வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பாதிப்புகள் அதிகம் உள்ள மாநிலத்தின் ஆறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா ஊரடங்கு உத்தரவை ஜூன் 18 வரை நீட்டித்தும், பாதிப்புகள் குறைந்துள்ள 14 நகர்ப்புற அமைப்புகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தவும் திரிபுரா அரசு இன்று முடிவு செய்துள்ளது.
ஆதார் கார்டில் மொபைல் எண்ணை மாற்றும் எளிய வழிமுறைகள்!
திரிபுரா சட்ட அமைச்சர் ரத்தன் லால் நாத் அவர்கள், அகர்தலா மாநகராட்சி, குமர்காட் நகராட்சி மன்றம், தர்மநகர் நகராட்சி மன்றம், பெலோனியா நகராட்சி மன்றம் மற்றும் ரணிர்பஜார் மற்றும் சோனாமுரா நகர் பஞ்சாயத்துகள் உள்ளிட்ட ஆறு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் முழு ஊரடங்கு உத்தரவு நாளை முதல் ஜூன் 18ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் இந்த பகுதிகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் மற்றும் சந்தைகள் திறந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
ஊரடங்கு தொடர்பான ஆலோசனைக கூட்டத்தில் சுகாதார வல்லுநர்களின் அறிக்கைகள் மற்றும் சுகாதாரத் துறையின் அறிக்கைகளைத் தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் புதிய தொற்று பாதிப்புகள் 5% க்கும் அதிகமாக உள்ளது. இதனால், அழகு நிலையங்கள், மால்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கும். அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, மத, கலாச்சார அல்லது திருவிழா போன்ற கூட்டங்களும் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.