ஜூன் 30 வரை ஏழு மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஏழு மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை ஜூன் 30 வரை நீட்டிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகளாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முதன் முதலாக கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மேற்கு இம்பால், கிழக்கு இம்பால், தபல், கச்சிங், உக்ருல், சுராச்சந்த்பூர் மற்றும் பிஷ்ணுபூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் பாதிப்பு எண்ணிக்கையை கருத்தில் கொண்டு இப்பகுதிகளுக்கு மட்டும் ஜூன் 11 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
கூகுள் CEO சுந்தர் பிச்சைக்கு ரூ.80 ஆயிரம் கோடி சம்பளம் – முதலிடம் யார் தெரியுமா?
இதை தொடர்ந்து அம்மாவட்டங்களில் மட்டும் நோய் தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதனால் ஜூன் 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவை நீட்டித்து, மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டதை தவிர கூடுதல் செயல்பாடுகள் அனுமதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் MSRTC வளாகத்தில் உள்ள விமான முன்பதிவு மற்றும் ரயில்வே முன்பதிவு அலுவலகங்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திறக்க அரசு அனுமதித்துள்ளது. மேலும் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு பேக்கரிகளை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தவிர ஊரடங்கு உத்தரவின் கீழ் உள்ள ஏழு மாவட்டங்கள் தவிர மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கும் இடையேயான போக்குவரத்துக்கு தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.