ஜூன் 26 வரை 12 நகராட்சிகளில் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!

0
ஜூன் 26 வரை 12 நகராட்சிகளில் ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு உத்தரவு!
ஜூன் 26 வரை 12 நகராட்சிகளில் ஊரடங்கு நீட்டிப்பு - மாநில அரசு உத்தரவு!
ஜூன் 26 வரை 12 நகராட்சிகளில் ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு உத்தரவு!

திரிபுரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள 12 நகராட்சி பகுதிகளில் மட்டும் ஜூன் 26ம் தேதி வரை கொரோனா ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

திரிபுரா மாநிலத்தில் தற்போது 4,406 கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 634 பேர் மாநிலத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். மேலும், 55,769 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது ஜூன் 19ம் தேதி வரை மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், தலைமைச் செயலாளர் குமார் அலோக் அவர்கள், ஊரடங்கு குறித்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். அதன்படி, ஜூன் 19 முதல் ஜூன் 26ம் தேதி அதிகாலை 5 மணி வரை அகர்தலா முனிசிபல் கார்ப்பரேஷன் (ஏஎம்சி) உள்ளிட்ட 12 குடிமை அமைப்புகளில் மட்டும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலமாக இருப்பிட சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை – முழு விவரங்கள்!!

அவை, அகர்தலா மாநகராட்சி, மோகன்பூர் மாநகர சபை, ரானிர்பஜார் நகராட்சி மன்றம், ஜிரானியா நகர் பஞ்சாயத்து, உதய்பூர் நகராட்சி மன்றம், பிஷல்கர் நகராட்சி மன்றம், குமர்கட் நகராட்சி மன்றம், கைலாசாகர் நகராட்சி மன்றம், பானிசாகர் நகராட்சி மன்றம் ஆகும். ஒன்பது நகராட்சி மன்றங்களும் இந்த பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. மாநில நிர்வாகம் இரண்டு நகர் பஞ்சாயத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. மாநிலத்தின் கிராமப்புறங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படவில்லை.

இருப்பினும், மாவட்ட நீதிபதிகள் தேவையான இடங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு எந்த தடையும் இல்லை, ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு உள்ள பகுதிகளுக்கு பயணம் செய்வதற்கு கட்டுப்பாடுகள் ஜூன் 25 மாலை 6 மணி வரையிலும் இருக்கும். ஊரடங்கு உத்தரவு பகுதியில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கடைகள் மற்றும் சந்தைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இருப்பினும், ஜிம்கள், வணிக வளாகங்கள், சினிமா அரங்குகள், நீச்சல் குளங்கள், அழகு நிலையங்கள் மற்றும் பூங்காக்கள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. தபாக்கள் மற்றும் உணவகங்கள் பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!