மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – பிரதமர் உத்தரவு!
நியூசிலாந்து நாட்டில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் அங்கு ஆக்லாந்து நகரில் தற்போது அமலில் இருந்து வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு நீட்டிப்பு:
நியூசிலாந்து நாட்டில் கொரோனா பாதிப்புகள் அதிகமாக பரவி வந்ததால் கடந்த ஆண்டு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டில் முற்றிலுமாக கொரோனா பாதிப்பு இல்லாததால் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது 6 மாதங்களுக்கு பின்னர் நியூசிலாந்தில் முதல் முறையாக ஒருவருக்கு ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழக அரசு வழங்கும் ரூ.25,000 ரொக்கப் பரிசு – இல்லம் தேடி கல்வி திட்டம்! முழு விபரம் இதோ!
கொரோனா தொற்றின் பரவல் ஆரம்பித்த ஆரம்ப காலத்திலேயே பிரதமர் மிகவும் தீவிர கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இதனால் அங்கு பாதிப்புகள் அதிகம் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது. விரைவிலேயே மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். 6 மாதங்களுக்கு பின்னர் டெல்டா வகை தொற்று பரவ ஆரம்பித்த பின்னர், மீண்டும் நாடு முழுவதும் ஊரடங்கை பிரதமர் அமல்படுத்தினார்.
திருப்பதி ஏழுமலையான் சிறப்பு தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
தொடர்ந்து ஆக்லாந்து நகரில் பாதிப்புகள் அதிகரித்ததால் அங்கு மட்டும் பொது முடக்கம் தற்போதும் அமலில் இருந்து வருகிறது. டெல்டா வகை வைரஸ் பாதிப்பு பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஆக்லாந்து நகரில் ஊரடங்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் உத்தரவிட்டுள்ளார். மேலும், கடந்த இரண்டு மாதங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.