ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக தற்போது அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் இரண்டு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தாக்கம் காரணமாக பல ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. மேலும் அதன் விளைவாக கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. அதனால் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இருந்த போதிலும் பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்றுநர் காலிப்பணியிடங்கள் – ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை!
இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக ஏற்கனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் கூடுதலாக இரண்டு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரகண்ட் மாநிலத்திற்கு பயணிக்கும் போது இனி ஆர்டி-பி.சி.ஆர் அல்லது விரைவான ஆன்டிஜென் சோதனை சான்றிதழ் கொண்டு செல்ல தேவையில்லை.
TN Job “FB Group” Join Now
முன்னதாக மாநிலத்தில் இருந்து மலைப்பகுதி மாவட்டங்களுக்கு செல்ல மக்கள் எதிர்மறை ஆர்டி-பி.சி.ஆர் அல்லது ரேபிட் ஆன்டிஜென் சோதனை அறிக்கைகளை எடுத்துச் செல்வது கட்டாயமாக இருந்தது. தற்போது அதில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநிலம் முழுவதும் அனைத்து கடைகளும், வணிக நிறுவனங்களும் இப்போது வாரத்தில் 6 நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே மாநிலம் முழுவதும் கடைகள் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.