நாடு முழுவதும் நாளை (மே 11) வரை ஊரடங்கு நீட்டிப்பு – பதற்றத்தில் பொதுமக்கள்!

0
நாடு முழுவதும் நாளை (மே 11) வரை ஊரடங்கு நீட்டிப்பு - பதற்றத்தில் பொதுமக்கள்!
நாடு முழுவதும் நாளை (மே 11) வரை ஊரடங்கு நீட்டிப்பு - பதற்றத்தில் பொதுமக்கள்!
நாடு முழுவதும் நாளை (மே 11) வரை ஊரடங்கு நீட்டிப்பு – பதற்றத்தில் பொதுமக்கள்!

இலங்கையில் தீவிரம் அடைந்து வரும் போராட்டம் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, பல இடங்களில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் மீண்டும் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பொருளாதார நெருக்கடிக்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகிய இரண்டு பேர் தான் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் இருவரும் பதவி விலக வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகள் வலுப்பெற்றன.

Exams Daily Mobile App Download

இதற்கிடையில் இலங்கையில் நேற்று கடும் வன்முறை வெடித்தது. நேற்று காலை கொழும்பு காலிமுகத் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்கள் தங்கியிருந்த கூடாரங்களை தீ வைத்து எரித்தனர். இதையடுத்து ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நாடு முழுவதும் ஆங்காங்கே மோதல் வெடித்தது. மேலும் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்தார்.

ஷபானா தான் எனக்கு எல்லாமே, எனக்கு மனைவியாக கிடைத்ததெல்லாம் வரம் – ஆர்யன் வெளியிட்ட பதிவு!

இந்த அறிவிப்பு வெளியாகிய சில மணி நேரத்தில் ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும், அரசுக்கும் எதிராக போராடுபவர்களுக்கும் இடையே வெடித்த மோதல் தற்போது வரை நீடித்து வருகிறது. அரசுக்கு எதிராக போராடியவர்களில், இதுவரை 7 பேர் பலியாகியுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டவர்கள் படு காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேறு பகுதிகளில் கலவரம் பரவியுள்ளதால் பதற்றம் நீடித்து வருகிறது. இதையடுத்து நாடு முழுவதும் நாளை (மே 11) வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மறுஉத்தரவு வரும் வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!