தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? அமைச்சர் முக்கிய விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் அரசு மெகா தடுப்பூசி முகாம் நடத்தி வருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது பற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு:
நாடு முழுவதும் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, தினசரி கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது. தற்போது, தினசரி கொரோனா பாதிப்பு 2800யை கடந்து பதிவாகி வருகிறது. அதனால் பல மாவட்டங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், அவ்வாறு அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சையில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் செப்டம்பர் மாதத்திற்குள் மருத்துவம் மற்றும் மருத்துவ களப்பணிகளில் உள்ள 4,308 பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் 5% தொற்று பாதிப்பு இருப்பதால் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிகளில் மீண்டும் ஷிப்ட் முறையில் வகுப்புகள்? அவசர ஆலோசனை!
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1,458 இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் 94.68% பேரும், இரண்டாவது தவணை செலுத்தியவர்கள் 85.47% பேரும் இருக்கின்றனர். தமிழகத்தில் தற்போது செய்யப்படும் கொரோனா பரிசோதனையில் 5% பாதிப்பு உள்ளது. அது 10% ஆக இருந்தால் தான் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பாதிப்புகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் 40% அதிகரித்து நோயாளிகள் அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் மட்டுமே ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.