தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருவதால் கூடிய விரைவில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்கிற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து விளக்கமளித்துள்ளார்.
ஊரடங்கு அறிவிப்பு
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. இதனால், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கொரோனா பரவலுக்கு ஆளான 5% மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதாவது, 21,513 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
Exams Daily Mobile App Download
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய இவர் தடுப்பூசியை கட்டாயமாக பொதுமக்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதாவது, தமிழகத்தில் இன்று மட்டுமே கிட்டத்தட்ட 1 லட்சம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதிலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமே 3,471 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. மேலும், தஞ்சாவூரில் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை 93.10 சதவிகித பொதுமக்களும், இரண்டாவது தவணை கொரோனா தடுப்பூசியை 87.10 சதவிகித பொதுமக்களும் போட்டு கொண்டுள்ளனர்.
மாநில அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு – புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!
மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் அவ்வளவாக இல்லை என்றாலும் கூட வேகமாக தொற்று பரவி வருகிறது. இதனால், மக்களின் மத்தியில் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்கிற அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 40% க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் பட்சத்தில் மட்டுமே ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதனால், தற்போதைக்கு தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பே இல்லை எனவும் கூறியுள்ளார்.