கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு குவிந்த விண்ணப்பங்கள் – டிப்-டாப் உடையில் மாடு பிடித்த பட்டதாரிகள்!
கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு மொத்தமாக 22 காலியிடங்கள் மட்டுமே உள்ளன. இந்த பணிக்கு மட்டுமே கிட்டத்தட்ட 5000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. நேற்று இந்த பணிக்கு நேர்காணல் தேர்வு நடைபெற்ற நிலையில் டிப்-டாப் உடையில் பட்டதாரிகள் மாடு பிடித்ததை பார்த்து அங்குள்ள மக்கள் வியந்துள்ளனர்.
கால்நடை பராமரிப்பு உதவியாளர்:
அரசாங்க உத்தியோகத்தில் இருந்தால் போதும் என்பது மட்டுமே பலரின் பெரிய ஆசையாக இருக்கிறது. அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு உள்ள 22 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டது. இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தோல்வி அடைந்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 22 காலிப்பணியிடங்களுக்கு 5000 விண்ணப்பங்கள் குவிந்தன.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுமுறை – அரசாணை வெளியீடு!
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் தான் விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்றவர்களும், இளங்கலை பட்டப்படிப்பு பயின்றவர்களும், இன்ஜினியரிங் முடித்தவர்களும் தான் முழுக்க முழுக்க விண்ணப்பித்தனர். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணல் தேர்வு நேற்று நடைபெற்றது.
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
தொடர்ந்து சைக்கிள் ஓட்டுதல், மாடு பிடித்து கட்டுதல், மாடுகளை கையாளும் முறை போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும், பொது அறிவு தொடர்பான கேள்விலும் கேட்டப்பட்டது. சில பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் மாட்டினை பார்த்து அச்சப்பட்டனர். கோட், டை என டிப் டாப்பாக வந்து மாடு பிடிக்கும் வேலையை செய்ய முன்வந்துள்ளதால் அங்குள்ள அதிகாரிகள் வியப்படைந்துள்ளனர். இன்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணிக்கு நேர்காணல் நடக்கிறது.