மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புக்கான CUET – தேர்வு தேதி அறிவிப்பு!
நாட்டில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு CUET தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு முகமை வாரியம் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக நிறுவனங்களில் இளநிலை படிப்பு, முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு CUET தேர்வு என்னும் பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு நாடு முழுவதும் உள்ள 90 உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இத்தேர்வு கணினி வழியில் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இதில் இளங்கலை பட்டப் படிப்புக்கான தேர்வு இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதற்கட்ட தேர்வு கடந்த ஜூலை 15 முதல் 20ம் தேதி வரை நடைபெற்றது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் புகார் செய்ய புதிய வசதி – தகவல் வெளியீடு!
இதில் மீதமுள்ள மாணவர்களுக்கு 2ம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 4 முதல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதி சீட்டை நேற்று இணையதளத்தில் தேர்வு முகமை வாரியம் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தேர்வு முகமை வாரிய தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளார். இத்தேர்வை நாடு முழுவதும் 500 நகரங்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் எழுத இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இத்தேர்வில் பெறப்பட்ட மதிப்பெண்களை பயன்படுத்தி மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். மேலும் இது தொடர்பாக யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வு செப்டம்பர் 1 முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இதற்கான விண்ணப்ப பதிவு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இதற்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.