மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை படிப்புகளுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வு முகமை வாரியம் வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் கவனத்திற்கு
நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக நிறுவனங்களில் இளநிலை படிப்பு, முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வானது நாடு முழுவதும் உள்ள 90 உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு நடத்தப்படுகிறது. இதனை தொடர்ந்து இத்தேர்வு என்டிஏ மூலம் கணினி வழியில் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தபடுகிறது. அதன்படி கடந்த ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து இத்தேர்வுக்கு இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 7ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் 500 நகரங்களில் CUET தேர்வை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் எழுதினர். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 56 மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள், 30 தனியார் பல்கலைக்கழகங்கள் என மொத்தமாக 86 உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது. அடுத்ததாக தற்போது மத்திய பல்கலைக்கழக நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வுக்கு மாணவர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது இத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்
அதன்படி முதுநிலை படிப்புக்கான CUET தேர்வு அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக யு.ஜி.சி. தலைவர் ஜெகதீஷ்குமார் அறிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் செப்டம்பர் 1 முதல் 7 வரை மற்றும் செப்டம்பர் 9 முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இதற்கான விண்ணப்ப பதிவு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. CUET தேர்வுக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.