தமிழக அரசு துறையில் பணிபுரிய மீண்டும் வாய்ப்பு – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளர் பணியிடத்தினை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் |
பணியின் பெயர் | வாகன சீராளர் |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மக்கள் தொடர்பு அலுவலக காலிப்பணியிடங்கள்:
வாகன சீராளர் பதவிக்கு என 2 பணியிடம் காலியாக உள்ளது.
வாகன சீராளர் கல்வி தகுதி:
- எட்டாம் வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வாகனங்களை சுத்தம் செய்வதிலும், பராமரிப்பதிலும் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும்.
- நல்ல உடற்தகுதி இருத்தல் வேண்டும்.
TN Job “FB Group” Join Now
வயது வரம்பு:
01.07.2021 அன்றுள்ளவாறு 18 முதல் 32 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளவும்.
அரசாணை (நிலை) எண். 91, மனித வள மேலாண்மைத்(எஸ்)துறை, நாள்.13.09.2021- ன்படி வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டு உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது OC-32, BC&MBC-34, SC&ST-37 உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.04.2022 மாலை 5.00 மணிக்குள் கீழே உள்ள முகவரிக்கு வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி
செயதி மக்கள் தொடர்பு அலுவலர்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியரகம்,
கடலூர் 607 001