மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (CTET) குறித்த முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்தும் CTET நடப்பு ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
CTET தேர்வு:
இந்தியாவில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சூழலிலும் தினந்தோறும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு தொற்று பரவல் படிப்படியாக குறைய ஆரம்பித்ததும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட தொடங்கியது. மேலும் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடைபெறவில்லை. அதே போல ஆசிரியர்கள் பணி நியமனங்களுக்கான தகுதித்தேர்வுகளும் நடைபெறவில்லை. மத்திய கல்வி வாரியம் ஆண்டுதோறும் சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வை நடத்தி வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்கள் கவனத்திற்கு – தோனி குறித்து நினைவு கூறும் கொண்டப்பா ராஜ் பழனி!
இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மத்திய அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்த நிலையில் 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக தேர்வானது நடைபெறவில்லை. தற்போது அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் மற்ற தேர்வுகளை தொடர்ந்து மாநில அரசுகள் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தி வருகின்றனர். மாநில அரசை தொடர்ந்து, மத்திய அரசும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான CTET தேர்வை நடத்த உள்ளது. இத்தேர்வானது ஜூலை மாதம் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
தேர்வு 2 தாள்களாக நடைபெறும் முதல் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கானது இந்த தேர்வை எழுத ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். இரண்டாம் தாள் எழுத பட்டப்படிப்புடன் இளங்கலை கல்வியியல் கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். முன்னதாக தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது தேர்ச்சி பெற்றதற்கான சான்று வாழ்நாள் முழுவதும் சான்றிதழ் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஏழு ஆண்டுகள் நிறைவு பெற்று காலாவதியான சான்றிதழ்களை வைத்துள்ள ஆசிரியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.