ரூ.25,000/-ஊதியத்தில் மத்திய அரசில் உதவியாளர் வேலைவாய்ப்பு!
மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CTCRI) வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் Field, Computer, Secretarial, Technical Assistants பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து உள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் உங்கள் பதிவுகளை செய்து கொண்டு பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
CTCRI வேலைவாய்ப்பு விவரங்கள் :
- மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தில் Field, Computer, Secretarial, Technical Assistants பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- Field Assistant – 2
- Computer Assistant – 1
- Secretarial Assistant – 1
- Technical Assistant – 1
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E / B.Tech / Diploma / B.Sc என பணிக்கு ஏற்றாற்போல் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் 21 வயது நிறைந்தவராகவும், 35 வயதுக்கு மிகாதவராகவும் இருப்பது அவசியம்.
- Field Assistant பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
- மற்ற பணிகளுக்கு என்று தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- மேற்கண்ட பனிக்களுக்கு தகுதியான மற்றும் திறமையான நபர்கள் நேர்காணல் (Interview) வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
CTCRI விண்ணப்பிக்கும் முறை :
இந்த மத்திய அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து [email protected] இந்த மின்னஞ்சல் முகவரிக்கு நாளைக்குள் அனுப்ப கேட்டுக்கொள்கிறோம். இப்பணிக்கு நாளையுடன் கால அவகாசம் முடிவதால் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளவும்.