CSK vs RCB: வெற்றி கணக்கை துவங்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்? பிளேயிங் XI அணி விவரம்!
கடந்த 4 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் இன்றைய ஆட்டத்தில் கேப்டன் ரவீந்திர ஜடேஜா மற்றும் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, இந்த ஆண்டிற்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறது. IPL போட்டிகளில் அதிகபட்ச சாதனைகளை படைத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15வது சீசனில் இதுவரை கலந்து கொண்ட 4 போட்டிகளிலும் அதிர்ச்சிகரமான தோல்வியை தழுவி இருக்கிறது. குறிப்பாக CSK அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்க தவறிய நிலையில் நட்சத்திர பந்து வீச்சாளர் தீபக் சஹார் இல்லாதது அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது.
TN TRB 9494 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் தகவல்!
இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று (ஏப்ரல்.12) நடைபெற இருக்கும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. கடந்த சில ஆட்டங்களில் ஃபாப் டூ பிலிஸிஸ் தலைமையிலான RCB அணி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இன்றைய ஆரத்தில் CSK உடன் மோதவிருக்கிறது. இது குறித்து CSK தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறுகையில், ‘தொடர்ச்சியாக நான்கு தோல்விகளுக்குப் பிறகு அணியின் தன்னம்பிக்கை அசைந்துள்ளது. நான்கு முறை சாம்பியனான CSK அணி கேப்டன் ரவீந்திர ஜடேஜாவின் கீழ், அறியப்பட்ட கிரிக்கெட்டை விளையாடவில்லை.
அவரால் முன்னணியில் இருந்து வழிநடத்த முடியவில்லை. இதுவரை மோசமான பருவத்தில் இருந்த இளம் ருதுராஜ் கெய்க்வாட் முன்னேறி விளையாட வேண்டும். மேலும் ஆல்ரவுண்டர்களான மொயீன் அலி மற்றும் ஷிவம் துபே ஆகியோர் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் RCB அணியில் தொடக்க ஆட்டக்காரர் அனுஜ் ராவத் தனது முதல் ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அரைசதம் அடித்திருந்தார். அதே நேரத்தில் விராட் கோலியும் மிகவும் தேவையான ரன்களை பெற்றார். அதனால் RCB அணி நல்ல பார்மில் இருக்கிறது என கணிப்புகள் எழுந்துள்ளது.
CSK பிளேயிங் லெவன் அணி:
ருதுராஜ் கெய்க்வாட்:
கெய்க்வாட் கடந்த ஆண்டு ஆரஞ்சு தொப்பியை வென்ற ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். ஆனால் இந்த ஆண்டு அவர் SRH க்கு எதிராக 13 பந்தில் 16 ரன்கள் எடுத்தார். மற்ற ஆட்டங்களில் வெறும் 1, 0 ரன்னில் அவுட் ஆகி இருக்கிறார்.
ராபின் உத்தப்பா:
தொடக்கத்திலேயே கெய்க்வாட் சிரமப்படுவதால், உத்தப்பாவின் பங்களிப்பும் சரியானதாக அமையவில்லை. இப்போது RCBக்கு எதிராக ஒரு வித்தியாசமான யுக்தியை கண்டுபிடித்து, நடுநிலையில் நீண்ட நேரம் விளையாட அவர் முடிவு செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மொயீன் அலி:
இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் SRHக்கு எதிரான சிஎஸ்கேயின் முந்தைய ஆட்டத்தில் 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.
அம்பதி ராயுடு:
ராயுடு இந்த சீசனில் இதுவரை 15, 27, 13 மற்றும் 27 என சராசரியான ரன்களை பெற்றுள்ளார். மொயீனுடனான அவரது கூட்டணி, CSK அணி மரியாதைக்குரிய ஸ்கோரை பெறுவதற்கு காரணமாக இருந்தது. ஆனால் உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரரிடம் இருந்து இன்னும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது.
சிவம் துபே:
SRHக்கு எதிராக வெறும் மூன்று ரன்களில் ஆட்டமிழந்தாலும், CSK அணிக்காக சிறப்பாக செயல்பட்டவர்களில் துபேயும் ஒருவர். அவர், அதற்கு முன் நடந்த போட்டிகளில் 49 மற்றும் 57 ரன்கள் எடுத்திருந்தார்.
ரவீந்திர ஜடேஜா:
புதிய சிஎஸ்கே கேப்டனைச் சுற்றி பல்வேறு கேள்விகள் சுழன்று வருகின்றன. கடந்த சீசன்களில் ஆக்ரோஷமாக விளையாடிய ஜடேஜா இந்த சீசனில் ஒரு கேப்டனாக பதவி வகிப்பதால் அதற்கான அழுத்தம் அவரது செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக தெரிகிறது. ஜடேஜா SRH அணிக்கு எதிராக 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்தார். இது CSK ஸ்கோரை 150க்கு மேல் தள்ளியது. அதே நேரத்தில், அவர் இந்த சீசனில் இதுவரை ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்துள்ளார். இது மொத்த அணிக்கும் கவலையான அறிகுறியாகும்.
MS தோனி:
மூத்த விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தோனி சீசனின் முதல் போட்டியில் அரை சதம் அடித்தார். அதற்கு பிறகு அவரது பேட்டிங் அமைதியாகிவிட்டது போல் தெரிகிறது. அவர் அணியின் உண்மையான தலைவராக இருப்பாரா என்பது பற்றிய ஊகங்களும் உள்ளன.
டுவைன் பிராவோ:
இந்த சீசனில் பிராவோ ஆறு விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதில் மூன்று விக்கெட்டுகளை முதல் போட்டியிலேயே எடுத்துள்ளார். தவிர மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் கேப்டன் பிராவோ இந்த சீசனில் இதுவரை ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
டுவைன் பிரிட்டோரியஸ்:
SRH அணிக்கான பிளேயிங் XIல் இருந்து பிரிட்டோரியஸ் நீக்கப்பட்டது சில CSK ரசிகர்களால் தவறாகப் பார்க்கப்பட்டது. இருப்பினும் அவருக்குப் பதிலாக மகேஷ் தீக்ஷனா 31 ரன்களை விட்டு கொடுத்து SRH அணிக்கு எதிராக விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. அதனால் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் டுவைன் பிரிட்டோரியஸ் மீண்டும் பிளேயிங் அணியில் இடம்பிடித்துள்ளார்.
கிறிஸ் ஜோர்டான்:
பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான சிஎஸ்கேயின் ஆட்டத்தில் ஆபத்தான ஷாருக்கான் மற்றும் ஒடியன் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டுகளை ஜோர்டான் கைப்பற்றினார். ஆனால் SRH அணிக்கு எதிராக ஜோர்டான் அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. தினேஷ் கார்த்திக், பிராவோ, ஜடேஜா ஆகியோருக்கு எதிராக நல்ல ஸ்டிரைக் ரேட் வைத்திருப்பதும் சிஎஸ்கேவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
முகேஷ் சௌத்ரி:
SRH அணிக்கு எதிராக கேப்டன் கேன் வில்லியம்சனை வெளியேற்றி, விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டு வீரர்களில் சௌத்ரியும் ஒருவர். அவரை அணியில் இருந்து நீக்க சிஎஸ்கேவுக்கு எந்த காரணமும் இருப்பதாக தெரியவில்லை.