IPL 2021 அப்டேட்ஸ்: துபாய் பறக்கும் சென்னை, மும்பை வீரர்கள்! என்னென்ன கட்டுப்பாடுகள்?
ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள வீரர்கள் தற்போது துபாய் செல்ல பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
IPL 2021 அப்டேட்ஸ்:
இந்தியாவில் நடத்தப்படும் உள்நாட்டு கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸின் தொற்றினால் கடந்த ஆண்டு இந்தியாவில் அல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த வருடம் இந்தியாவிலேயே இந்த போட்டிகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
ICC Men’s T20 World Cup 2021 – 15 வீரர்கள் கொண்ட வங்கதேச அணி அறிவிப்பு!
கொரோனா தொற்றின் அபாயத்தினால் எந்த ஒரு அணிக்கும் அதன் சொந்த மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படவில்லை. பலத்த பாதுகாப்புடனும், கொரோனா கட்டுப்பாடுகளுடனும் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையிலும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவர்க்கும் தொற்று பரவியதால் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டது. அதன் இரண்டாம் கட்ட போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.
செப்.19ம் தேதி முதல் போட்டிகள் துவங்க உள்ள நிலையில், முதல் நாளில் சென்னை – மும்பை அணிகள் மோத உள்ளன. இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் கடைசி போட்டி கொரோனா தொற்றின் பரவலினால் ரத்து செய்யப்பட்டது. அத்தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்கள் இந்திய அணியியல் அங்கம் வகிப்பதால் அவர்களை துபாய் கொண்டு சேர்க்க அணி உரிமையாளர்கள் தற்போது தனி விமான ஏற்பாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.
ICC Test தரவரிசை பட்டியல் – டாப் 10 வரிசையில் பும்ரா & தாகூர் முன்னேற்றம்!
அதன்படி சிறப்பு விமானங்கள் மூலம் வீர்ரகள் அழைத்து செல்லப்பட உள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் வீரர்கள் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 2 முறை கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர். பரிசோதனையில் நெகட்டிவ் வரும் பட்சத்தில் பயோ-பபுள் சூழலுக்குள் அனுப்பப்பட்டு போட்டியில் பங்கேற்பார்கள். ஏற்கனவே சில வீரர்கள் பரிசோதனை முடிந்து பயோ பபுள் பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பந்து வீச்சாளர் பும்ராஹ் தனி விமானம் மூலமாக துபாய் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.