CSIR நிறுவனத்தில் ஊக்கத்தொகையுடன் வேலை – Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்..!
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகம் (CSIR) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Technician Apprentices பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் மெட்ராஸ் வளாகத்தில் (CSIR) Technician Apprentices பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Information Technology, Civil Engineering, Electrical & Electronic Engineering பாடப்பிரிவில் Diploma Degree பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- Technician Apprentices பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
- இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு ரூ.8,000/- மாத ஊக்கத்தொகையாக கொடுக்கப்படும்.
- Technician Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 27.06.2022 அன்று CSIR Madras Complex, Chennai என்ற முகவரியில் நடைபெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.