CSIR – NPL ஆய்வகத்தில் சூப்பர் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க…!
தேசிய இயற்பியல் ஆய்வகம் (CSIR – NPL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Scientist பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான தேசிய இயற்பியல் ஆய்வக அறிவிப்பில், Scientist பணிக்கு என பல்வேறு பிரிவின் கீழ் மொத்தமாக 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்த Instrumentation / Electronic Engineering / Mechanical Engineering / Electrical engineering / Electronic & communication engineering / computer engineering / computer science / IT / computer application போன்ற பாடப்பிரிவில் M.Sc / M.E / M.Tech / Ph.D போன்றவற்றில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- 23.05.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.1,16,398/- ஊதியமாக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.