CSIR – NPL ஆய்வகத்தில் சூப்பர் வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு..!
தேசிய இயற்பியல் ஆய்வகம் (CSIR – NPL) தற்போது Scientist பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என பல்வேறு பிரிவின் கீழ் மொத்தமாக 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Physical Laboratory (CSIR – NPL) |
பணியின் பெயர் | Scientist |
பணியிடங்கள் | 25 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CSIR NPL பணியிடங்கள்:
தற்போது வெளியான தேசிய இயற்பியல் ஆய்வக அறிவிப்பில், Scientist பணிக்கு என பல்வேறு பிரிவின் கீழ் மொத்தமாக 25 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
CSIR NPL கல்வித் தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்த Instrumentation / Electronic Engineering / Mechanical Engineering / Electrical engineering / Electronic & communication engineering / computer engineering / computer science / IT / computer application போன்ற பாடப்பிரிவில் M.Sc / M.E / M.Tech / Ph.D போன்றவற்றில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
Exams Daily Mobile App Download
CSIR NPL வயது விவரங்கள்:
23.05.2022 அன்றைய நாளின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதாக 32 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
CSIR NPL ஊதிய விவரங்கள்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.1,16,398/- ஊதியமாக அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
CSIR NPL தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now
CSIR NPL விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே விரைந்து அதிகாரபூர்வ தளத்தில் உள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இன்றே (23.05.2022) இறுதி நாளாகும். அதன் பின் ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வண்ணம் தயார் செய்து அறிவிப்பில் உள்ள முகவரிக்கு 30.05.2022 ம் தேதிக்கு வந்து சேரும்படி, தபால் அனுப்ப வேண்டும்.