தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.50,448/- || 54 காலியிடங்கள்!
மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CECRI) இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Technical Assistant & Technician ஆகிய பணிகளுக்கு ஆர்வமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன. எனவே கீழுள்ள தகவல்களை அடிப்படையாக கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு திறமை படைத்தவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | CSIR CECRI |
பணியின் பெயர் | Technical Assistant & Technician (1) |
பணியிடங்கள் | 54 |
கடைசி தேதி | 12.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
CSIR CECRI நிறுவனத்தில் Technical Assistant & Technician ஆகிய பணிகளுக்கு என 54 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Technician வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 27.09.2021 தேதியில் அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
CSIR CECRI கல்வித்தகுதி :
- Technical Assistant – Chemistry/ Physics/ Microbiology/ Bio-technology/ Computer Science/ Information Technology/ Hotel Management/ Mathematics ஆகிய பாடங்களில் B.Sc தேர்ச்சி/ பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Technician – தொடர்புடைய பிரிவில் ITI தேர்ச்சி அல்லது National/ State Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.
CECRI ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.28,216/- முதல் அதிகபட்சம் ரூ.50,448/- வரை சம்பளம் வழங்கப்படும்.
CSIR தேர்வு செயல்முறை:
விண்ணப்பதாரர்கள் Skill/ Trade Test/ Written exam சோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
- பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
- SC/ ST/ PwBD/ Women/ CSIR Employees விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 12.10.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.