தமிழக கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
திருப்பூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயிர் கடன் மற்றும் இதரக் கடன்கள் பெறலாம் என்று மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பயிர்க்கடன்:
தமிழகத்தில் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், குறைந்த வட்டியில் சுய உதவிக் குழு கடன், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கடன் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகளில் விதவைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கான கடன் போன்ற அனைத்து விதமான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் எளிதில் கடன் பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தில் மண்டல இணைப்பதிவாளர் விவசாயிகள் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இனி கிடையாது – மாணவர் சேர்க்கை குறைவு!
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையுடன் பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டில் 49,671 விவசாயிகளுக்கு ரூ.509.14 கோடி அளவிற்கு பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நிலவுடைமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக வி.ஏ.ஓ . அடங்கல் சான்று. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களை செலுத்தி கடன்களை பெற்று கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
மேலும் பயிர் கடன்களை உரிய தேதியில் திருப்பி செலுத்தினால் வட்டி சலுகை வழங்கப்படும் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் பெற உறுப்பினர் படிவத்தை பெற்று ரூ.110 பங்குத் தொகை மற்றும் நுழைவுக் கட்டணம் செலுத்தி உறுப்பினராக சேர வேண்டும் பிறகு உரிய ஆவணங்களுடன் மனுவை சமர்ப்பித்து அனைத்து வகையான கடன்களையும் பெற்றலாம். கடன்கள் குறித்த விவரங்களுக்கு 0421-2971184, 0421-2216355, 04258-221795 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு அறியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.