தமிழகத்தில் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி? உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

0
தமிழகத்தில் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி? உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
தமிழகத்தில் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி? உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!
தமிழகத்தில் 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி? உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விவசாயக் கடன் தள்ளுபடி தொடர்பாக போடப்பட்ட வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 5 ஏக்கருக்கு விவசாய கடன் வாங்கும் நபர்களுக்கு மட்டுமே விவசாய கடன் தள்ளுபடி செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது.

விவசாயிகளின் கடன் தள்ளுபடி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12,110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் 110-ன் என்ற விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டார். அத்துடன் பட்டா, சிட்டா போன்ற ஆவணங்களுடன் விவசாயம் செய்ய நகைக்கடன் பெற்றிந்தால் மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும், விவசாயம் சாராத கடன்களுக்கு தள்ளுபடி செல்லாது எனவும் தெரிவித்தார்.

TATA நிறுவனத்தில் 2,000 பேருக்கு வேலைவாய்ப்பு – தமிழகத்தில் ரூ.3,000 கோடி முதலீட்டில் ஆலை!

மேலும் அரசு திட்டங்களின் கீழ் ஏதேனும் பயிர் கடன் மானியம் பெற்றிந்தால் பெறப்பட்ட மானியம் போக மீதம் உள்ள தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இது தொடர்பான வழக்குகள் விவசாய அமைப்பு ஒன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில் 5 ஏக்கர் மேல் உள்ள விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தீர்ப்பை தெரிவித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

தமிழகத்தில் புதன்கிழமை (நவ.24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதில் உச்சநீதிமன்றம், “தமிழக அரசுக்கு எந்த விவசாயிக்கு கடன் தள்ளுபடி கொடுக்க வேண்டும் என்ற முடிவு எடுக்க அனைத்து அதிகாரமும் உண்டு” என அறிவித்தது. மேலும் 5 ஏக்கர் வரையில் விவசாய கடன் பெற்றவருக்கு மட்டுமே விவசய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது. தமிழக அரசு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி பற்றி வரையறுத்ததை உச்சநீதிமன்றம் வரவேற்கிறது. மேலும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பான அனைத்து விவசாயிகளுக்கும் கடன் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதை ரத்து செய்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!