கிறிஸ்டியானோ ரொனால்டோ 2ம் முறை மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைகிறார் – அதிகாரபூர்வ தகவல்!
கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டாவது முறையாக மான்செஸ்டர் யுனைடெட்டுடன் மீண்டும் இணைகிறார். முன்னதாக அவர் இந்த கூட்டணியில் அவர் 2003 முதல் 2009ம் ஆண்டு அணியில் இருந்தார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ:
கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகீச கால்பந்து அணியின் தலைவராக 2010 உலக கால் பந்தாட்ட விளையாட்டுக்கு களம் இறங்கி உள்ளார். இவர் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் ஆடினார். முன்னதாக இத்தாலிய கால்பந்து அணியான யுவெண்டஸ் அணிக்கு ஆடி வந்தார். கால்பந்து வீரர்களிலேயே அதிக விலைக்கு ஏலம் பெறப்படுபவர் இவர் மட்டுமே. இவர் கடந்த 2008ம் ஆண்டுக்கு முன்னதாக Ballon d’Or என்ற உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான விருதையும், எட்டு பெரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.
தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மாநில அரசின் அதிர்ச்சி ரிபோர்ட்!
இதற்கு முன்னதாக இவர் மான்செஸ்டர் யுனைடெட்அணியுடன் கடந்த 2003 முதல் 2009 ம் ஆண்டு வரை பணியாற்றினார். அப்போது, 292 ஆட்டங்களில் 118 கோல்களை அடித்தார். ஆகஸ்ட் 27ம் தேதியான இன்று ஆங்கில கால்பந்து கிளப் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக மீண்டும் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட உள்ளார் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக ரொனால்டோ ஜுவென்டஸ் அணியில் விளையாடினர். ஒப்பந்தம் பற்றிய முழு விவரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை.
TN Job “FB Group” Join Now
முன்னதாக, ரொனால்டோவை மான்செஸ்டர் சிட்டி அணி தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் 36 வயதான நபரை அணியில் இணைக்க அணி விரும்பவில்லை என்று கூறிவிட்டது. இதனால் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு ரொனால்டோதேர்வு செய்யப்பட்டுள்ளார். ஜுவென்டஸ் அணிக்கு 25 மில்லியன் யூரோ ($ 29.49 மில்லியன்) ஏலத்தைப் பெற்றதாக அறிவித்தது அணி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.