CRIS ரயில்வே மையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

0

CRIS ரயில்வே மையத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு..!

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் (CRIS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள ASE, ADA பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

ரயில்வே தகவல் அமைப்புகளுக்கான மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், Assistant Software Engineer (ASE) பணிக்கு 144 பணியிடம் என்றும், Assistant Data Analyst (ADA) பணிக்கு 06 பணியிடம் என்றும் மொத்தமாக 150 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பொறியியல் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இப்பணிக்கு என்று தேர்வு செய்யப்படும் நபர்கள் மத்திய அரசின் 7ம் ஊதிய அளவின்படி, Level – 7 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் இப்பணிக்கு அளிக்கப்படும் கூடுதல் தொகை குறித்து அறிவிப்பில் காணலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் GATE 2022 ம் தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!