நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை – ஐகோர்ட் எச்சரிக்கை!
நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீதிமன்றம் அறிவிப்பு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற கிளையில் 2017 ஆம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் அவருக்கு மருத்துவ காப்பீடு தொகை வழங்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனாலும் இதுவரை மருத்துவ காப்பீடு வழங்கப்படவில்லை. அதனால் அந்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
Join Our WhatsApp
Channel ” for Latest Updates
இந்த மனு விசாரனையில் மருத்துவத்துறை உயர் அதிகாரி ஆவணங்களை தொலைத்துவிட்டதாக வழக்கறிஞர் வாதாடினார். அதற்கு பதில் அளித்த நீதிபதி நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகளில் ஒருவரையாவது பணி நீக்கம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். இது குறித்து உச்சநீதிமன்றம் கூறுகையில், நீதிமன்ற உத்தரவை மதிக்காத அதிகாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசு பணியிட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற சூப்பர் சான்ஸ் – உடனே ஆன்லைன் வகுப்பில் சேருங்க!
நீதிமன்ற உத்தரவை ஏதோ அலுவலக உத்தரவு போல அதிகாரிகள் எண்ணுவதாக நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பு மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே நீதிமன்றங்களின் நோக்கம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.