பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த கருத்தரங்கம் – விழிப்புணர்வு அவசியம்.. காவல் ஆணையர் கருத்து!!
பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் குறித்து பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இதனை தடுக்க விழிப்புணர்வு அவசியம் என்று தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க காவல்துறை தனி கவனம் செலுத்தி வருகிறது என்றும் கூறியுள்ளார்.
வன் கொடுமை:
சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதற்கான சட்டங்கள் குறித்த கருத்தரங்கு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் மகளிர் ஆணைய தலைவர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க விழிப்புணர்வு அவசியம் என்று கூறினார்.
தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – இன்றைய வானிலை அறிக்கை!
மேலும் பெண்கள் அனைவரும் காவலன் செயலியை தங்களது ஸ்மார்ட் போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இதன் மூலம் எல்லா நேரங்களிலும் அவசர தேவைகளுக்கு காவல் கட்டுப்பாட்டு அறையை உங்களால் தொடர்பு கொள்ள முடியும்.
மேலும் 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டும் பெண்கள் உதவியை பெறலாம். தற்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க காவல்துறை தனி கவனம் செலுத்தி வருகிறது. தற்போது 80 சதவீதம் பெண்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவே பாதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.