ஹேக் செய்யப்பட்ட க்ருனால் பாண்டியாவின் ட்விட்டர் அக்கவுண்ட் – ரசிகர்கள் குழப்பம்! நடந்தது என்ன?

0
ஹேக் செய்யப்பட்ட க்ருனால் பாண்டியாவின் ட்விட்டர் அக்கவுண்ட் - ரசிகர்கள் குழப்பம்! நடந்தது என்ன?
ஹேக் செய்யப்பட்ட க்ருனால் பாண்டியாவின் ட்விட்டர் அக்கவுண்ட் - ரசிகர்கள் குழப்பம்! நடந்தது என்ன?
ஹேக் செய்யப்பட்ட க்ருனால் பாண்டியாவின் ட்விட்டர் அக்கவுண்ட் – ரசிகர்கள் குழப்பம்! நடந்தது என்ன?

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் க்ருனால் பாண்டியாவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக் செய்தவர்கள், “இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக ஏற்றுக்கொண்டது” என்ற பதிவை வெளியிட்டனர். இதனால் பலரும் குழப்பம் அடைந்தனர்.

ரசிகர்கள் குழப்பம்:

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் க்ருனால் பாண்டியாவின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்த ஹேக்கர்கள் , பிட்காயின் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டனர். இதை தொடர்ந்து அவரது கணக்கு மீட்கப்பட்டு, பதிவு நீக்கப்படும் பணி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. க்ருனால் பாண்டியா ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்குபவர், கிரிக்கெட் விளையாட்டு பதிவுகள், அவரது குடும்ப வீடியோ பதிவுகள் போன்று தொடர்ச்சியாக தனது சமூக ஊடக பக்கத்தில் அவர் பதிவிட்டு வருகிறார்.

மாநில அரசு ஊழியர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி (DA) உயர்வு – அரசு சூப்பர் அறிவிப்பு!

க்ருனால் பாண்டியாவின் தனிப்பட்ட கணக்கான (@krunalpandya24) 1.3 மில்லியன் பேர் பின்பற்றுகின்றனர். இந்நிலையில் க்ருனால் பாண்டியாவின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை சிலர் ஹேக் செய்துள்ளனர்.மேலும் அதில் இருந்து, “இந்தியா அதிகாரப்பூர்வமாக பிட்காயினை சட்டப்பூர்வ நாணயமாக ஏற்றுக்கொண்டது” என்று பதிவிட்டு மோசடி லிங்க் ஒன்றும் இணைக்கப்பட்டிருந்தது. இதனால் பலரும் குழப்பம் அடைந்தனர். பின்பு க்ருனால் பாண்டியாவின் தனிப்பட்ட கணக்கு ஹேக் செய்யப்பட்டது தெரியவந்தது. அதேபோல் கடந்த ஆண்டு பிரதமர் மோடி ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – போக்குவரத்துத்துறை முக்கிய உத்தரவு!

கடந்த ஐபிஎல் தொடரின் போது பாண்டிய 13 போட்டிகளில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து இந்த ஆண்டு நடக்கப்போகும் IPL தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி க்ருனால் பாடியவை தக்க வைக்கவில்லை. பெங்களுருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடக்க இருக்கும் மெகா ஏலத்தில் க்ருனால் இடம்பெற்றுள்ளார். இதற்கு முன் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த பாண்டிய சமீப காலத்தில் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!