கிரெடிட் கார்டு பயனர்கள் கவனத்திற்கு – ரூ.500 வரை அபராதம்! புதிய விதிகள் அமல்!
இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய கிரெடிட் கார்டு விதிகளின் கீழ் குறிப்பிட்ட வங்கிகள் ஒரு சில விதிகளை பின்பற்றவில்லை என்றால், ஒவ்வொரு நாளும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 500 வரை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகள்
தற்போது அனைத்து கார்டுதாரர்கள் மற்றும் அதனை வழங்குபவருக்கும் இடையே சிறந்த வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய கிரெடிட் கார்டு விதிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதே வேளையில், இந்த புதிய விதிகள் வாடிக்கையாளருக்கு அதிக பாதுகாப்பு மற்றும் அதிகார உணர்வை வழங்குகிறது. அந்த வகையில், RBI அறிவித்துள்ள கிரெடிட் கார்டுகளின் பில்லிங் வழங்குதல் மற்றும் மூடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்கள் இந்த மாத தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளன.
TN Job “FB Group” Join Now
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை வழங்குதல் மற்றும் இயக்குதல் குறித்த முதன்மை வழிகாட்டுதல்களுடன் இந்திய ரிசர்வ் வங்கி சில விதிகளை ஏற்கனவே நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இது குறித்து ஏப்ரல் 21 தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949ன் பிரிவு 35A மற்றும் பிரிவு 56 மற்றும் இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934ன் அத்தியாயம் IIIB ஆகியவற்றால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்துவதன் மூலம், இந்திய ரிசர்வ் வங்கி பொது நலனுக்காக அவசியம் மற்றும் பொருத்தமானது என கருதி புதிய விதிகளை அமல்படுத்துகிறது’ என தெரிவித்துள்ளது.
இப்போது புதிய முதன்மை வழிகாட்டுதலின் கீழ், கிரெடிட் கார்டு வழங்குநர்கள் எவ்வாறு செயல்படலாம் என்பதற்கான வழிகாட்டுதல்களை RBI அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் கிரெடிட் கார்டு மூடல், பில்லிங் மற்றும் வழங்கல் ஆகியவற்றில் மாற்றங்கள் இதில் அடங்கும். அந்த வகையில் கிரெடிட் கார்டு தொடர்பான இந்த வழிகாட்டுதல்களின் விதிகள் ஒவ்வொரு ஷெட்யூல்டு வங்கிக்கும் (பணம் செலுத்தும் வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் தவிர்த்து) மற்றும் இந்தியாவில் செயல்படும் அனைத்து வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் (NBFCs) பொருந்தும்.
Post Officeல் பயன் தரும் சேமிப்பு திட்டங்கள் – முழு விவரம் இதோ!
அந்த வகையில் கிரெடிட் கார்டை மூடுவது தொடர்பாக, ரிசர்வ் வங்கி தனது ஆணையில் பல வழிகாட்டுதல்களை பரிந்துரைத்துள்ளது. அதன்படி, கிரெடிட் கார்டை மூடுவதற்கான எந்தவொரு கோரிக்கையும் ஏழு வேலை நாட்களுக்குள் கிரெடிட் கார்டு வழங்குநரால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும், அட்டைதாரரின் அனைத்து நிலுவைத் தொகைகளையும் திருப்பி செலுத்துவதற்கு உட்பட்டது என்று மத்திய வங்கி கூறியுள்ளது. இப்போது கோரிக்கையை எழுப்பிய பின்னர் ஏழு வேலை நாட்களுக்குள் கிரெடிட் கார்டை மூடவில்லை என்றால், அட்டை வழங்குபவர் ஒவ்வொரு நாளும் ரூ.500ஐ வாடிக்கையாளருக்கு செலுத்த வேண்டியிருக்கும்.
தவிர, கிரெடிட் கார்டு கணக்கை மூடிய பிறகு, கிரெடிட் கார்டு கணக்குகளில் இருக்கும் ஏதேனும் கடன் இருப்பு அட்டைதாரரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். அந்த இருப்பு அவர்களிடம் கிடைக்கவில்லை என்றால் கார்டு வழங்குபவர்கள், கார்டுதாரரின் வங்கிக் கணக்கின் விவரங்களைப் பெறுவார்கள். மேலும், அட்டை வழங்குபவர், அஞ்சல் மூலமாகவோ அல்லது வேறு வழியிலோ கோரிக்கையை பெறுவதில் தாமதத்தை ஏற்படுத்தும் வகையில், மூடல் கோரிக்கையை அனுப்ப வலியுறுத்தக் கூடாது என்று ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.