கிரெடிட் கார்டு வைத்துள்ளீர்களா? நவம்பர் 15 முதல் அதிரடி மாற்றங்கள் அமல் – வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தனது வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுகளுக்கு புதிய கட்டண மாற்றங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது. மேலும், இவை அமலாகும் நாள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு:
கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்களுக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புதிய மாற்றங்களை அமலுக்கு கொண்டு வர உள்ளது. புதிய கட்டணங்கள் நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என்றும், எனவே, நவம்பர் 15-ஆம் தேதிக்கு முன் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணங்கள் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதில், “அன்புள்ள வாடிக்கையாளரே உங்கள் கிரெடிட் கார்டு கட்டணங்கள் 15 நவம்பர் 2022 முதல் மாற்றி அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய மாற்றங்களை குறித்து மேலும் அதிக விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எஸ்பிஐ வங்கியானது EMI கட்டணங்களை உயர்த்தியுள்ளது போல், தற்போது கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை செலுத்துவதற்கு புதிய கட்டணத்தை விதித்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
முன்னதாக EMI செயல்பாட்டிற்கான செயலாக்க கட்டணமாக ரூ.99 மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தின் படி EMI செயல்பாட்டிற்கான செயலாக்க கட்டணம் ரூ,199 ஆக உயர்ந்துள்ளது. இதை தவிர இதற்கான வரிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. இதேபோல், வாடகை செலுத்தும் பரிவர்த்தனைகளுக்கான செயலாக்கக் கட்டணம் ரூ. 99 மற்றும் அதனுடன் அதற்கான வரிகளும் சேர்க்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட இந்த கட்டணம் ஆனது வரும் நவம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்