தீபாவளிக்கு இரவு 8 மணிமுதல் 10 மணிவரை பட்டாசு வெடிக்க அனுமதி – மாநில அரசு அறிவிப்பு!
ராஜஸ்தானில் மாநிலத்தில் 4 மாதங்களுக்கு பட்டாசு விற்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று அத்தடை நீக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்டாலின் அவர்கள் அம்மாநில முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
பட்டாசு தடை:
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் தடை விதித்தது. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அம்மாநில முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக பட்டாசு தொழில் நலிவடைந்துள்ள நிலையில், சுமார் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.
12 முதல் 17 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி – புதிய திட்டம்!
அதனால் தொழிலாளர்களின் நலன் கருதி பட்டாசுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு 4 மாநில முதல்வர்களுக்கும் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதை ஏற்று, தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்ததையேற்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பசுமை பட்டாசு விற்க தடையில்லை என அறிவித்துள்ளார். மேலும் தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக தபால் துறையில் 500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்த அறிவிப்பை அடுத்து தனது கோரிக்கையை ஏற்ற ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். நன்றி தெரிவிக்கும் கடிதத்தில் நான் எழுதிய கடிதத்தின் மீது நடவடிக்கை மேற்கொண்டதற்கு நன்றி, தங்களின் வாழ்வாதாரத்திற்கு பட்டாசு தொழிலையே நம்பி இருக்கும் ஏராளமான தொழிலார்களின் வாழ்வில் கனிவுமிக்க உங்கள் அன்பு ஒளியேற்றும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.மேலும் பட்டாசுக்கு விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு, சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளார்