கோவின் இணயத்தில் பிராந்திய மொழிகள் திடீர் நீக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்த முன்பதிவு செய்து கொள்வதற்கு கோவின் இணையதளம் தொடங்கப்பட்டது. அதில் தமிழ் மொழியை சேர்க்க கோரிக்கை எழுந்த நிலையில், தற்போது அனைத்து பிராந்திய மொழிகளும் நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழி மட்டும் இடம் பெற்றுள்ளது.
மொழிகள் நீக்கம்:
இந்தியாவில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகினறன. அதில் முக்கிய பணியாக தற்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. கோவக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வைரஸ் தொற்றுலிருந்து காப்பாற்றி கொள்ள மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். அனைத்து மாநில அரசுகளும் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக செலுத்தி வருகிறது.
தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய குழு அமைப்பு – அரசாணை வெளியீடு!!
சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறையும் நிலவுகிறது. இதனால் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தாமதமாகிறது. மருத்துவமனைகள், கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம்களில் மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள கூட்டமாக நிற்கின்றனர். இந்த கூட்ட நெரிசலை தடுக்க மத்திய அரசு கோவின் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் தடுப்பூசி செலுத்தி கொள்ள நினைப்பவர்கள் இந்த இணைய பக்கத்தில் பதிவு செய்து கொண்டு தடுப்பூசிகள் செலுத்தி கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
இந்த இணைய பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி மட்டும் இருந்தது. மற்ற இந்திய மொழிகளையும் சேர்க்க கோரிக்கைகள் எழுந்தன. இதன் படி 9 பிராந்திய மொழிகள் கோவின் இணையப்பக்கத்தில் நேற்று சேர்க்கப்பட்டது. தமிழ் மொழி மறுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழ் மொழியை சேர்க்கும் படி குரல் எழுப்பினர். இதன் பிறகு கோவின் இணையபக்கத்தில் அனைத்து மொழிகளும் தற்போது நீக்கப்பட்டு ஆங்கிலம், இந்தி மொழிகள் மட்டும் இடம்பெற்றுள்ளது.