கோவாக்ஸின் vs கோவிஷீல்டு – இரண்டில் சிறந்த தடுப்பூசி எது? ஆய்வு முடிவுகள் இதோ!
இந்தியாவில் செலுத்தப்பட்டு வரும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் ஆய்வுகளில் கோவாக்சின் தடுப்பூசியைக் காட்டிலும் கோவிஷீல்டு அதிகளவிலான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது என முடிவுகள் தெரிவிக்கின்றன.
கோவாக்சின் vs கோவிஷீல்டு:
இந்தியாவில் பரவி வரும் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் நோய் தடுப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இது பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் பாரத் பயோ டெக் நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசியை பரிசோதனை செய்து வருகிறது. இந்த தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் கொரோனாவிலிருந்து தப்பிக்க தற்போது ஒரே தீர்வாக தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன. இரண்டு தடுப்பூசிகளில் எது கிடைத்தாலும் செலுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கொரோனா தடுப்பூசிகள் அனைத்து மாநிலங்களும் மக்களுக்கு இலவசமாக அரசு முகாம்கள் வாயிலாக வழங்கப்படுகிறது. 18 வயது முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளில் கோவிஷீல்டு அதிக ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. கோவிஷீல்டு எடுத்துக் கொண்டவர்களின் ஆன்டிபாடிகள் 115 AU/ml ஆக உள்ளது.
பூவே உனக்காக சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி நடிகர் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
நாடு முழுவதும் முதலில் தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டு சுகாதாரப் பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 425 பேரின் உடலில் 98.1% ஆன்டிபாடிகள் உற்பத்தி ஆகியுள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 90 பேரின் உடலில் 90% ஆன்டிபாடிகள் உற்பத்தியாகியுள்ளது என ஆய்வுகள் தெரிவிக்கிறது. கோவிஷீல்டு தடுப்பூசியின் தடுப்பாற்றல் 80% ஆகவும், கோவாக்சின் தடுப்பாற்றல் 70% ஆகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. கோவாகின் தடுப்பூசியை காட்டிலும் கோவிஷீல்டு அதிகளவு ஆன்டிபாடிகளை உடலில் உற்பத்தி செய்கிறது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இரண்டு தடுப்பூசிகளுமே உயிரிழப்புகளை 100% வரை தடுக்கிறது என சுகாதாரத்துறை தெரிவிக்கிறது.