கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை இரு மடங்கு அதிகரிப்பு – சீரம் நிறுவனம்!!
இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தற்போது தடுப்பூசி விலை இருமடங்கு அதிகரிப்பு செய்து தடுப்பூசி நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று:
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் கடந்த 2019 இறுதி முதல் பரவி வருகிறது. ஒரு சில மாதங்களில் பாதிப்பு உலகின் அனைத்து நாடுகளிலும் தீவிர நிலையில் இருந்தது. தொற்று தொடங்கிய ஆரம்ப நிலையில் இருந்து உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.
ஆட்டோ, டாக்சி ஓட்டுனர்களுக்கு ரூ.1,500 நிதியுதவி – மாநில முதல்வர் அறிவிப்பு!!
இரு வகை தடுப்பூசி:
இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் என்ற இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. முதலில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வந்த காரணத்தால் முன்னுரிமை அடிப்படையில் மட்டுமே தடுப்பூசிகள் போடப்பட்டது. தற்போது தேவையான அளவு தயாரிக்கப்பட்டு விட்டது. இதனால் அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இருமடங்கு விலை:
கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை முன்னதாக ரூ.250 ஆக இருந்த நிலையில் தற்போது தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 ஆகவும், மாநில அரசுகளுக்கு ரூ.400 ஆகவும் சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது. உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால் மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியதின் பேரில் மத்திய அரசு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்