வெளிச்சந்தையில் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி விற்பனை – மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி!
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செலுத்தப்படும் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
இந்தியாவில் பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக அரசு கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி வருகிறது. நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் என்ற இரு நிறுவன கொரோனா தடுப்பூசிகள் 18 வயது மேற்பட்டோர்க்கு 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 15 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்திய ஐடி நிறுவனங்களில் TCS செய்த சாதனை – மகிழ்ச்சியில் ஊழியர்கள்!
அதனை தொடர்ந்து தற்போது 60 வயது மேற்பட்டவர்கள், இணை நோயாளிகள், முன்கள பணியாளர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசிகளின் பயன்பட்டால் கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்து வருகிறது. 2 தடுப்பூசிகளை தற்போது அரசே நேரடியாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக செலுத்தி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. 2 தடுப்பூசிகளை தற்போது அரசே நேரடியாக கொள்முதல் செய்து இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த நிலையில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசி மருந்துகளை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதி கேட்டு ஒன்றிய அரசிடம் அதன் உற்பத்தி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இது குறித்து ஆராய்ந்த வல்லுநர் குழு, இரண்டு மருந்துகளையும் வெளிச்சந்தையில் விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என பரிந்துரைத்தது. இதையடுத்து மருத்துவ பரிசோதனை விதிகளின் கீழ் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.