கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 16 ஐரோப்பிய நாடுகளில் அனுமதி – சீரம் நிறுவன அதிகாரி அறிவிப்பு!!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிட்ஷீல்டு தடுப்பூசியை செலுத்தி கொண்டவர்கள் பயணம் செய்ய 16 ஐரோப்பிய நாடுகள் அனுமதி வழங்கியுள்ளதாக சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. கொரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே ஒரே தீர்வு என்பதால் அனைத்து நாடுகளும் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தியாவில் சீரம் நிறுவனம் கோவிட்ஷீல்டு, கோவாக்சின் என தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி – குளிர்க்கால கூட்டத்தொடர் ஒத்திவைப்பு!
அதில் கோவிட்ஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்வது கோவாக்சின் தடுப்பூசியை விட அதிக நன்மைகளை வழங்குவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் பயணம் மேற்கொள்ள கிரீன் பாஸ் என்ற நடைமுறை செயல்படுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான கிரீன் பாஸ் சான்றிதழுடன் ஸ்பெயின் நாட்டில் இருந்து பிரான்ஸ், பிரான்ஸில் இருந்து இத்தாலி என சென்று வரலாம்.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஐரோப்பிய மருந்துகள் அமைப்பு இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் வேக்ஸேவரியா, அமெரிக்காவின் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய நான்கு தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஆனால் இந்தியாவில் சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு கிரீன் பாஸ் அங்கீகாரம் வழங்கவில்லை. இதனால் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
TN Job “FB Group” Join Now
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் ஐரோப்பாவில் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது ஐரோப்பிய நாடுகள் கோவிஷீல்டு தடுப்பூசியை அங்கீகரித்தது. அதே போல பிரான்ஸ் நாடும் இந்த தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறுகையில், தற்போது பிரான்ஸ் அரசு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கோவிஷீல்டு இப்போது 16 ஐரோப்பிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.