இந்தியாவில் கொரோனா வைரஸ் 3வது அலை பரவல் – உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்!!
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையே இன்னும் தீராத பட்சத்தில், அடுத்து வரப்போகும் மூன்றாம் அலையை கட்டுப்படுத்த இப்போதிலிருந்தே தயாராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.
மூன்றாம் அலை:
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா இரண்டாம் அலை மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு நம் நாடு பெருமளவு நோய் தாக்குதலை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் 4 ஆயிரம் வரை மக்கள் பலியாகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால், கொரோனா தாக்கப்பட்டு ஒரு பக்கம் உயிரிழப்பு ஏற்பட்டாலும், பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் இல்லாததால் பலர் உயிரிழக்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்தியா சந்தித்து வரும் தற்போதய சூழலை கண்டு பிற உலக நாடுகள் தங்களது ஆதரவு கரத்தை நீட்டி வருகிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகின்ற போதிலும், நோய் இன்னும் கட்டுக்குள் வரவில்லை என்பது கசப்பான உண்மையாகும். இந்த சூழலில் கொரோனாவின் மூன்றாம் அலை இந்தியாவை தாக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். முன்னதாக மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர், இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலையை தடுப்பது கடினம் என கூறியிருந்தார்.
இந்தியாவில் மே இறுதியில் கொரோனா தாக்கம் குறையும் – மருத்துவர் கணிப்பு!!
கூடுதலாக இந்த மூன்றாம் அலை பெருமளவு குழந்தைகளை தாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் உச்ச நீதிமன்றமும், கொரோனாவின் மூன்றாவது அலையை சமாளிக்க மத்திய, மாநில அரசுகள் தயாராக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் கொரோனா இரண்டாம் அலையில் அதிகளவு இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வரும் சூழலில், இதன் மூன்றாம் அலை குழந்தைகளை தாக்கக்கூடும் என்பதால் அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.