கொரோனா கட்டுப்பாடுகள் சீனர்களுக்கு மட்டும் தான்? – பதிலடி நடவடிக்கை!
புதிய வகை கொரோனா தொற்று பல்வேறு நாடுகளிலும் பரவி, பாதிப்பை அதிகப்படுத்தி வரும் நிலையில், சில நாடுகள் சீன நாட்டை சேர்ந்த மக்களுக்கு மட்டும் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்:
கொரோனா வைரஸ் தற்ப்போது வரை பல வகை மரபணு மாற்றம் அடைந்த வைரஸ்களை உருமாறி விட்டது. மரபணு மாறிய கொரோனா வைரஸ்களில் குறிப்பிட்ட சில வைரஸ்களை தவிர மற்ற அனைத்தும் மிகவும் வீரியம் மிகுந்ததாக உள்ளது. அந்த வகையில் தற்போது BF 7 என்ற புதிய வகை சீனாவில் இருந்து பரவ தொடங்கி, தற்போது அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து போன்ற பல்வேறு நாடுகளிலும் பரவி உள்ளது.
Post Office: SSY சேமிப்பு திட்டத்தில் இவ்வளவு பலன்களா? பெண் குழந்தைகளுக்கு ஏற்றது!!
Follow our Instagram for more Latest Updates
இதனால் சம்பந்தப்பட்ட நாடுகள் தீவிர கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகிறது. இந்நிலையில், சீன அரசு, மற்ற நாடுகளிலும் கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகம் உள்ள போதிலும், ஒரு சில நாடுகள் சீனர்களுக்கு மட்டும் அதிக கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும், இவை தொடர்ந்தால் இதற்கான பதிலடி நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. சீனாவின் இந்த அறிக்கை உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.